Thursday, August 18, 2016

9. தினம் அலைந்தே தேடும் இன்பம் எங்கே (மறைந்திருந்தே பார்க்கும்) **




ஜதி
தினம் அலைந்தே-தேடும் இன்பம்-எங்கே
சொல்வாய் ..

தினம் அலைந்தே-தேடும் இன்பம்-எங்கே
உண்ணும் கிறக்கத்திலா கொள்ளும் உறக்கத்திலா
சொல்லு.. தினம்-அலைந்தே தேடும் இன்பம்-எங்கே
(2)
அனுதினமும்
(Short Music) 
உலகில் அனுதினமும்

பரந்திருக்கும் உலகில் அனுதினமும்
அந்தக் குரங்கினுக்கும் மேலே பரபரப்பும்
(2) 
கொண்டு 
தினம்-அலைந்தே தேடும் இன்பம்-எங்கே 
ஜதி

என்றிருந்தாலும் தன்னைத் தானறிந்தே 
உய்ய..வில்லையென்றால்-கேடு தான் அறிவாய்
(2)
போதையில் நாம்-வாழ வேணுமா (2)
சொந்த நாட்டுக்கு நாம்-போக வேண்டாமா (2)
*மாளவா ? மீளவா ? மாயவா ? ஓயவா ?
தினம்-அலைந்தே தேடும் இன்பம்-எங்கே 
ஜதி

மாயத்திலே தினமும் உழல என்றா
இந்த லோகத்திலே வந்தே நீ பிறந்தாய்
(2)
சோகத்திலே உன்னை மூழ்கவைக்கும்
சோகத்திலே பின்னே  மூழ்கவைக்கும்
சிறு இன்பத்திலே விட்டில் பூச்சியைப் போல் (2)
*மாளவா ? மீளவா ? மாயவா ? ஓயவா ?
தினம்-அலைந்தே தேடும் இன்பம்-எங்கே 
ஜதி 

தேறாத வாழ்வோடு விதியோடு ஏன்-வாட ?
வந்து-விடு யோகம்-பூண
கூரான வினையோடு முடியாது தினம்-வாட
முனைந்து-விடு உண்மை-தேட
துணிவோடு மனம்மாறி இதை-நாடி இதுவேளை விரைவினில் வினைபோக நாடி-வருவாய் 
தூயனே ஆகவா மாயமே போகவா உனக்காணும் ஆவலால் வா 

தினம்-அலைந்தே தேடும் இன்பம்-எங்கே 
கொல்லும் மோகத்திலா கொள்ளும் யோகத்திலா 
என்று
உணர்ந்து கொண்டாய் இன்னும் தயக்கம் என்ன
ஜதி

*மாள விரும்புகிறாயா இல்லை பிறப்பிறப்பினின்று மீள விரும்புகிறாயா
மாய விரும்புகிறாயா ? இல்லை பிறப்பிறப்பென்னும் மாய விளையாட்டிலிருந்து , இறைவனடி கண்டு, நிரந்தரமாக  ஓய விரும்புகிறாயா




No comments:

Post a Comment