Sunday, August 21, 2016

2.6. யாவையும் அறிவேன்(ஆலய மணியின் ஓசையை)



அகந்தை
ஆன்மாவை மனமாகவும் உடலாகவும் புலன்களாகவும் காண்பது அகந்தை
__________

யாவையும் அறிவேன் என்பது அறியாமை 
புரிவதும்-நானே என்பதும்-அதுதானே
அதைப் பாவம்-எனவே எனுமே அந்த-ஆன்மம் எனும்-உண்மை
*அதைப் பார்த்தே இருக்கும் வெறுமே அந்த ஆன்மம் ஒரு ஊமை 
யாவையும் அறிவேன் என்பது அறியாமை 
புரிவதும்-நானே என்பதும்-அதுதானே
(MUSIC)
எதற்கும்-நானே என்பதற்கே ஓர்விளக்கம் அன்றோ அறியாமை 
வேலையில்லாதவன் யார்-என்றால் அதற்கும்-நானே என்றிடுமாம்
முந்திரி போல் அது பதில் தருமாம்  
எதற்கும் நானே-நானே எனக்கூறும்-அறியாமை 
என் செயலும் தானே பாரேன் எனப் பேசும் அது-பெருமை
யாவையும் அறிவேன் என்பது அறியாமை
(MUSIC)
சாகும்-போகும் உடலினையே அலையும்-தொலையும் மனதினையே 
யாதும்-அறியாப் புலன்களையே நான்-எனப் பேசும் அறியாமை 
தான்-எனும் அகந்தை அறியாமை 
உடலை-மனதைப்-புலனை தான் என்னும்-அறியாமை 
இதை உள்ளே அமர்ந்தே பார்க்கும் அந்த ஆன்மம் ஒரு-ஊமை 
யாவையும் அறிவேன் என்பது அறியாமை 
புரிவதும்-நானே என்பதும்-அதுதானே
அதைப் பாவம்-எனவே எனுமே அந்த-ஆன்மம் எனும்-உண்மை
*அதைப் பார்த்தே இருக்கும் வெறுமே அந்த ஆன்மம் ஒரு ஊமை
யாவையும் அறிவேன் என்பது அறியாமை 



*சாட்சி பூதம்


No comments:

Post a Comment