Friday, August 19, 2016

2.5.பொய்யெது மெய்யெது (மௌனமே பார்வையால்)





பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
(SM)
பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
(music)
தும்பிக்கையில்லா ஒரு தந்தக்கரி போல்-மருள் தந்த-போதை தனில் தினம்-ஆடும் மனம்-ஆடும்
(SM)
தும்பிக்கையில்லா ஒரு தந்தக்கரி போல்-மருள் தந்த-போதை தனில் தினம்-ஆடும்
அங்கம்-முழுதும் அது தந்தத்-திமிரால்-மது உண்ட மந்தியெனத் திரிந்தாடும் 
மது உண்ட மந்தியென மனமாடும் 
ம்..ம்..
பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
(MUSIC)
புத்தி-உரைத்தே-நீ சத்தை-அளித்தால்-பே..ராண்மை கொண்டு-அது உனைத்தாக்கும் உனைத்தாக்கும்
(SM)
புத்தி-உரைத்தே-நீ சத்தை-அளித்தால்-பே..ராண்மை கொண்டு-அது உனைத்தாக்கும்
நன்மை-உரைக்கும்-உந்தன் நல்ல-முகத்தில் சுடு மொழிகள்-தொடுத்து-அது கணை-வீசும்
சுடு மொழிகள்-தொடுத்து-அது கணை-வீசும்
ம்..ம்..
பொய்யெது மெய்யெது அறியாமை அறிந்திடாதே 
நன்மையும் தீமையும் புரி..யாது-அந்த நோயில்
_____________

No comments:

Post a Comment